Mr.Saint Is Here
போராளிகளே.... Dont Worry....
- ஜோவி
நீயும் ஒரு நாள் வெல்வாய்...நீயும் ஒரு கட்டத்தில் சாதிப்பாய்...என்று நமக்குள் ஏதோ ஒரு உணர்வு தூண்டி கொண்டே இருக்கும்....அதை தான் திரைபடபாடல் ஓன்று நமக்கு ஞாபகபடுத்தும்..
உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உளத்தில் போராடலாம் உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்....
எத்தகைய ஒரு சமூக அமைப்பிலும் அந்த மனதூண்டல் இன்றும் நம்மை வாழ வைத்து கொண்டு இருக்கிறது...
சமூகத்தில் பிறப்பு, அழுகை, அன்பு, மகிழ்ச்சி, இறப்பு போன்ற போன்ற நியதிகள் இருந்தாலும் கூட..."காதல், பணம், சாம்ராஜ்ய வாழ்க்கை, அந்தஸ்து " போன்ற இடர்பாடுகளுக்குள் சிக்கி பித்து பிடித்த பித்தன் போல என்றும் அலைந்து கொண்டிருக்கும் மனிதர்களுக்குள் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்...இதில் நீ பெரியவன், நான் பெரியவன் அவன் மிக சிறியவன், இவன் மிக பெரியவன், என்ற ஒரு அரசியலும் இருக்கிறது...(இதை பதிபவர்கள் தங்களுக்குளேயே விமர்சித்து பாருங்கள் )..அப்படிஎன்றால் அரசியல் தெரிந்தவன் தான் பிழைக்க தெரிந்தவனா?....இல்லை என்று சொல்பவர்களுக்கு நான் கூறும் பல மொழி...
....''செய் அல்லது செத்து மடி''..
வலி உனக்கும் உண்டு... எனக்கும் உண்டு... யாராக இருந்தாலும் ஏன் ஐந்தறிவு படைத்த மிருகங்களாக இருந்தாலும் கூட வலி உணர்வு பொருந்தும்...சமூக அமைப்பினுள்; இருக்கும் எந்த மனிதனாக இருந்தாலும் கூட வலியை உணராமல் வாழ்ந்திருக்க முடியாது....இத்தகைய வலிகள் நிறைந்த வாழ்க்கை போராட்டத்தில் அரசியலில் திளைத்து சமூகத்தை மாற்ற நினைக்கும் யாராக இருந்தாலும் அவர்களை உங்களுக்குள்ளேயே ரத்தம் சொட்ட சொட்ட படு கொலை செய்ய காத்து கொண்டிருக்கிறான்
...Mr.Saint...
No comments:
Post a Comment